கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு சென்ற சுரேஷ் குடும்பம் நடத்த வருமாறு கவிதாவை அழைத்தார். ஆனால் அவர் வர முடியாது என்று கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு நேற்று மீண்டும் அங்கு சென்று கவிதாவிடம் தனது வீட்டிற்கு வருமாறு கேட்டார்.
அப்போது அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவிதாவின் நெஞ்சு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும் கவிதாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதோடு தன் குடும்பம் நடத்த வராததால் சுரேஷ் கொலையை செய்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.