Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: பெட்ரோல் விலை உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்….!!!!!

பாகிஸ்தான்நாட்டில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து, 233.91 ரூபாய் ஆக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புது விலை ஆக்ஸ்ட் 16 நள்ளிரவு முதல் அடுத்த 14 தினங்கள் வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.233.91, டீசல் 244.44 ரூ, மண்னெண்ணெய் 199.40 ரூபாய் என புதியதாக விலை ஏற்றப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம், அந்நிய செலாவணி மாற்றுவிகிதத்தில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணிகளால் பெட்ரோலின் விலையை அதிகரித்துள்ளோம் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அத்துடன் இதில் மானியம் அளித்து இனி மேலும் அரசாங்கம் இழப்புகளை சந்திக்க தயாராக இல்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாபாஸ்ஷெரிஃப் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆனதில் இருந்து மின்சாரம் மற்றும் எரிப்பொருளின் விலையேற்றம் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |