நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ரேஷன் கார்டை பொறுத்தவரை நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம்.
ஆனால் ஒரு சிலர் தகுதி இல்லாமல் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருவதால் தகுதி உடையோருக்கு பலன் கிடைக்காமல் போகிறது. அதனால் பலரின் ரேஷன் கார்டுகளும் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உங்களின் ரேஷன் கார்டு ஒருவேளை தொலைந்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
அதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதன் பிறகு உள்ளே சென்றதும் பயனாளர் ஐடி என்பதை பதிவிட வேண்டும்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
தற்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.
விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை நீங்கள் pdf வடிவில் சேமித்த டவுன்லோட் செய்ய வேண்டும்.
இந்த pdf படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் மீண்டும் புதிய ரேஷன் கார்டு உங்களுக்கு வழங்கப்படும்.அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். ரேஷன் கார்டில் மோசடி நடைபெறுவதை தடுக்க ஆதார் இணைப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது.