ராஜஸ்தான் மாநிலம் சுரனா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வாழ் என்ற தலித் சிறுவன் படித்து வந்தான். ஒன்பது வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்ததால் ஆசிரியர் அவனை கடுமையாக தாக்கியதால் சிறுவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பனாசந்த் மேக்வால் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், சிறுவன் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த காயம் அடைந்தேன். ஒன்பது வயது தலித் மாணவன் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அட்டூழியங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.