Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினியின் அடுத்த 2 படங்கள்”…. வெளியான தயாரிப்பாளர்கள் குறித்த தகவல்….!!!!!!

ரஜினியின் அடுத்த இரண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகின்றது. மேலும் இத்திரைப்படத்தின் படபிடிப்பானது இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு பிறகு ரஜினி 2 தயாரிப்பு நிறுவனங்களுக்காக படம் பண்ண போவதாக செய்தி வந்திருக்கின்றது.

ரஜினி இதுவரை பணியாற்றாத தயாரிப்பாளர்களான பஞ்சு அருணாச்சலம் மற்றும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ப்ரொடெக்ஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக படம் பண்ண இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. அதுவும் இத்திரைப்படங்களில் பாதி சம்பளத்தில் நடிகை இருப்பதாகவும் செய்தி வந்திருக்கின்றது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |