மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.
இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் பிரபு உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பவானிசாகர் அணையும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூவர்ண நிறத்தில் ஜொலிப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சொல்கின்றனர்.