Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெறும் சுதந்திர தின விழா…. மாற்றப்பட்ட போக்குவரத்து….!!!!

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு 15ஆம் தேதி காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை முக்கிய சாலைகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் போக்குவரத்து வகைகள் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. அதாவது உழைப்பாளர் சிலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரசாலைகளிலும் அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் தவிர பிற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது.

காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரி முனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மற்றும் வடக்கு கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம். பாரி முனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்கசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை, காமராஜர் வழியாக சாலையை வந்தடைந்து கொள்ளலாம்.

மேலும் அண்ணா சாலையிலிருந்து கொடிமரச் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி,  ராஜா அண்ணாமலை மன்றம் வடக்குக்கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுறையை சென்று அடைந்து கொள்ளலாம். முத்துசாமி சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |