ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையின் மறுபுறத்தில் இருந்து நீண்ட காலமாக பயங்கரவாதத்தைக் கண்ட காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1990ல் பயங்கரவாதம் அதிகரித்ததால் அங்கு திரையரங்குகள் மூடப்பட்டது. மல்டிபிளக்ஸ் திரையரங்கு வரும் செப்டம்பரில் இருந்து திறந்து செயல்படவுள்ளது. INOX ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, மூன்று ஆடிட்டோரியங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் அதிநவீன ஒலி அமைப்புகள் மற்றும் வசதியான இருக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மல்டிப்ளெக்ஸில் சுமார் 520 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். இங்கு உணவு விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன என்றும், அவை குழந்தைகளை ஈர்க்கும் இடமாக இருக்கும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது. இப்பணியை விரைவில் முடிக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.