Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புது மொபட் வாங்கிய பெண்…. வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சந்தனமகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரசெல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீரசெல்வி விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஷோரூமில் மொபட் வாங்கியுள்ளார். அதனை ஓட்டிக்கொண்டு வீரசெல்வி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டை விலக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மொபட் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வீரசெல்வியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |