Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு மகனை தாக்கிய தந்தை… பலியான சோகம்… கொலை வழக்காக மாற்றி போலீஸ் தீவிர விசாரணை….!!!!!!

மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன்  குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில்  ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து குமாரின் தலையில் பலமாக அடித்திருக்கின்றார்.

இதில் படுகாயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீது சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இது பற்றி மேச்சேரி போலீசார் குமாரின் தந்தை ராஜி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மேச்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |