Categories
உலக செய்திகள்

5 அடி பொம்மைக்குள் சாமர்த்தியமாக ஒளிந்திருந்த திருடன்…. அதன்பின் நடந்தது என்ன?…

பிரிட்டனில் வாகனத்தை திருடி சென்ற ஒரு இளைஞர் ஐந்து அடி கொண்ட டெடி பியர் பொம்மைக்குள் மறைந்திருந்த நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்திருக்கிறார்கள்.

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரான ஜோஸ்வா டாப்சன் ஒரு வாகனத்தை திருடியிருக்கிறார். மேலும் அந்த வாகனத்திற்கு டீசல் நிரப்பி விட்டு அதற்கும் பணம் கொடுக்காமல் தப்பியிருக்கிறார். இரண்டு மாதங்களாக காவல்துறையின் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அந்த இளைஞரின் வீட்டு முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு சென்றபோது அந்த வீட்டில் யாரும் இல்லை. வீட்டை சோதனை செய்தபோது 5 அடி கொண்ட டெடிபியர் பொம்மை ஒன்று இருந்தது. ஆனால், அது வித்தியாசமாக இருந்ததால் காவல்துறையினர் அதனை உன்னிப்பாக கவனித்திருக்கிறார்கள்.

அந்த பொம்மை மூச்சு விட்டிருக்கிறது. உடனடியாக, அதனை எடுத்து பார்த்தபோது அதில் ஜோஷ்வா மறைந்திருந்தது தெரியவந்தது. உடனே அந்த பொம்மையை கிழித்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விட்டனர்.

Categories

Tech |