Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் மழை…. குஷியில் மக்கள்….!!!!

வளைகுடாநாடுகளில் எப்போதாவது தான் கனமழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் வெயில் கொளுத்தும். இதற்கிடையில் கோடைக்காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம் ஆகும். அதேநேரம் மழைக்காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கன மழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும். அந்த அடிப்படையில் ஐக்கியஅரபு நாட்டில் சென்ற சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன மழை காலங்களில் மழைநீரை சேமித்து வைப்பதற்கு ஐக்கியஅரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது பெய்துவரும் மழை காரணமாக அந்நாட்டிலுள்ள ஏராளமான அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் இங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு நாட்டிலுள்ள வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் போன்ற 7 அணைகள் திறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |