Categories
அரசியல்

“ரஸ்கின் பாண்ட்டின் லிட்டில் புக் ஆப் இந்தியா”… பிரதமர் நேரு, மோடியின் சுவாரசிய தகவல்கள் இதோ…!!!!!!

புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்  எழுதி இருக்கும் எ லிட்டில் புக் ஆப் இந்தியா செலிப்ரேட்டிங் 75 இயர்ஸ் ஆஃப் இண்டிபெண்டன்ஸ் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பற்றியும், இந்திய பிரதமர் மோடி பற்றியும் சுவாரசியமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதாவது 87 வயதான ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது, அகிலம் முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராக பரிணமித்தது என எல்லாமே இந்தியாவில் தான். குழந்தை இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், குரு நாவல்கள் என ஏராளமான படைப்புகளை படைத்துள்ளார்.

அவரது பல நூல்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான வாசகத்தளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தான் வாழும் தேசத்தின்  நினைவுகளை உள்ளடக்கிய நூலாக இதை அவர் எழுதியுள்ளார். ஜவஹர்லால் நேரு மக்களின் மனிதர் நிறைய பரிசுகளை தந்தவர் சாதனைகளை செய்தவர் என இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இன்றைய பிரதமர் மோடி எளிமையான தொடக்கத்தில் இருந்து உருவாகி தனது அரசியல் சாதூரியம் மற்றும் யோக மன உறுதியின் மூலமாக உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார் எனவும் எழுதி இருக்கிறார்.

நேருவின் சுறுசுறுப்பு அனைவரும் அறிந்த விஷயமே. மேலும் அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த ஒருவர் தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றி ரஸ்கின் பாண்ட் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நேரு எத்தனை வேகமாக இயங்கி வந்தார் என்பதை உணர்த்துகின்றது. நேருவின் பாதுகாவலராக இருந்த ஒருவர் 1960 இல் என்னை சந்தித்தார். நேருவுக்கு ஈடு கொடுப்பது கடினமான காரியமாக இருந்தது எதிர்பாராத திசைகளில் எல்லாம் துரிதமாக திரும்பி விடுவார். அவர் பின்னால் ஓடியே எனது எடை குறைந்து விட்டது என்றும் அவர் என்னிடம் கூறினார். மேலும் நான் அவரை சந்தித்தபோது எடை கூடியிருந்தார் தனது பணிகளை வேறொரு பாதுகாவலருக்கு கைமாற்றி விட்டது மனிதர் ஆஸ்வாசமடைந்திருந்தார் என வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார் ரஸ்கின் பாண்ட்.

நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாய் மன்மோகன் சிங் உட்பட பல சிறந்த பிரதமர்கள் நமக்கு கிடைத்திருக்கின்றார்கள். தற்போது பிரதமர் மோடி எளிய பின்னணியில் இருந்து தொடங்கியவர் அவரது அரசியல் சாதூரியம் இயல்பான புத்திசாலித்தனம் மற்றும் யோக மன உறுதி போன்றவை இரண்டு பொது தேர்தல்கள் மூலம் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது என ரஸ்கின் பண்டிட் கூறியுள்ளார். லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் என இந்திய பிரதமர் பதவியை அலங்கரித்த பல தலைவர்களை பற்றியும் இந்த நூலை குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் நதிகள், வனங்கள், இலக்கியம், பண்பாடு, காட்சிகள், ஒலிகள், வண்ணங்கள் என ஏராளமான விஷயங்கள் பற்றி இந்த சிறிய புத்தகத்தில் பதிவாகியுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா என்னும் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |