இன்றைய காலத்தில் மாமியார் மருமகள் சண்டை சண்டை இல்லாத வீடுகளே இல்லை என்று கூட சொல்லலாம். அப்படி சண்டை இல்லாத வீடுகளை விரல் வைத்து எண்ணி சொல்லிவிடலாம். இவ்வாறு மாமியார் மருமகளுக்குள்ளே சண்டை குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தற்போது ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆந்திராவில் மாமியார் ஒருவர் தனது மருமகளின் தலையை துண்டாக வெட்டி சாலையில் நடந்து வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
அன்னமய மாவட்டத்தை சேர்ந்த சுப்பம்மா, இவருடைய மகன் இறந்த நிலையில், மருமகள் வசுந்தரா (35) உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வசுந்தரா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த அவர், கொடூரமாக கொலை செய்து, தலையுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.