கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1 1/4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியாபுரம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
அதன்பின் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மதியழகனின் மனைவி அஞ்சலி குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.