Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன நீ லவ் பண்றல்ல….. அப்ப இத பண்ணு….. காதலியை டார்ச்சர் செய்த காதலன்….!!!!

மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இதற்கிடையே, தன் காதலி தன்னை விட்டு சென்று விடுவாள் என்ற அச்சத்தில் காதலன் இருந்துள்ளார். இதனால் காதலியை அவரது மார்பில் தனது பெயரை பச்சை குத்திக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். என்னுடைய பெயரை உன்னுடைய மார்பில் பச்சை குத்து, அப்போதுதான் உன் காதல் உண்மையாகும் என்றும் வார்த்தை விட்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து சொல்லி டார்ச்சர் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். அதன் விளைவாக மாணவியும் அவரது தந்தையும் சேர்ந்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இளைஞரின் மீது புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி ஆகியுள்ளது.

Categories

Tech |