Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. டெட்எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |