சென்னையில் உள்ள மாம்மல்லப்புரத்தில் கடந்த 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த போட்டி 10 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் நிறைவிழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் பங்கேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் விழாவில் கண்கவர் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.