Categories
சினிமா

“நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும்”…… பத்திரிகையாளர்களிடம் சண்டைக்கு சென்ற டாப்ஸி….!!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் காஞ்சனா, கேம் ஒவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாலிவுடில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றனர். அதன் பிறகு பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தது. ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் சரியாக ஓடவில்லை. தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்திலும், இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள “டோபரா” படத்திலும் டாப்ஸி நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சிக்கு தாமதமாக டாப்ஸி வந்ததாகவும், ஏன் லைட் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

அதற்கு டாப்ஸி, எனக்கு சொன்ன டைம்க்கு நான் வந்திருக்கிறேன், என்னை எப்படி லேட் என்று சொல்லலாம் என்று நடிகை டாப்ஸி அந்த பத்திரிகையாளர்களிடம் கேட்டுள்ளார். கேமரா முன் நிற்க்கிறேன், நான் எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும். கொஞ்சம் நீங்களே கேமரா முன்னாடி வந்து பேசினால், நீங்க எப்படி கேள்வி கேட்டேன்னு புரியும். எப்போதுமே நடிகர்கள்தான் தவறு செய்வார்கள் என்று பொரிந்து தள்ளி விட்டார். இதனையடுத்து ஆலியா பட்டின் டார்லிங்ஸ், அமீர்கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்களை தடை செய்வதாக ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், தங்களுடைய டோபாரா படத்தையும் தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பேசிய நிலையில், பத்திரிகையாளர்களுடன் டாப்ஸி மல்லுக்கு சென்றதே புரமோஷன் யுக்தியாக இருக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Categories

Tech |