மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபோவில் மகளிர் போலீசார் சாமியார் மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படும் வைராக்கி ஆனந்த் கிரி என்பவரை கைது செய்தனர். இந்த சாமியாரிடம் பெண் ஒருவர் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டுள்ளார் .அப்போது அந்த பெண்ணுக்கு மயக்கம் மருந்து கலந்து நீரை கொடுத்த சாமியார் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த பெண்ணிடம் இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார் . இதனைத் தொடர்ந்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார் . இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாமியாரை கைது செய்தனர் . குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு வந்த பெண்ணை சாமியார் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.