தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஸ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சீதாராமன் படத்தில ராஷ்மிகா நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றனர்.
இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பாபு படத்தில் நடித்த ரூ.1 கோடி வாங்கிய அவர், தற்போது புஷ்பாபு பாகம் 2 நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ராஷ்மிகா இந்தி படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்களில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள இயக்குனர்கள் குழப்பத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.