கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளில் கூட்டம் அலைமோதியது.
பிரபல சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காத்திருந்தார்கள். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. மேலும் காலை நேரத்தில் மழை பெய்தும் மழையை பொருட்படுத்தாமல் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடினார்கள்.
இதை அடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் குவிந்தார்கள். பின் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டார்கள். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரைச் சாலையில் இருக்கும் தமிழன்னை பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.