Categories
மாநில செய்திகள்

“மின்சார சட்ட திருத்த மசோதா”… எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!!!!!!!!

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் ஆரம்ப காலகட்டத்திலேயே எதிர்த்த நிலையிலும் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் தொடர் அமலியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி இருந்த சூழலில் சனி ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர் கே சிங்  தாக்கல் செய்துள்ளார்.

மின்சார சட்டம் 2003 இல் பல முக்கிய திருத்தங்களை செய்து புதிய சட்ட வரைவை கடந்த 2020 வருடம் ஏப்ரல் 17ஆம் தேதி மக்களின் கருத்துக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில் மாநில வாரியங்களுக்கு பதிலாக மதிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதனிடம் அனுமதி பெற்று மின்விநியோகத்தில் நேரடியாக தனியார் நிறுவனம் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் மக்களுக்கு அளித்துவரும் இலவச மின்சாரம் உள்ளிட்ட மானியங்களை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

மசோதாவின் படி மதிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே  ஏகபோக உரிமை இருக்கும் என்பதனால் அது மாநிலங்களின் உரிமை பறிக்கும் செயல் என விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |