மிகப்பெரிய ஓவியர்கள் ஒருவராக கருதப்படுபவர் ராஜா ரவிவர்மா . இவர் தமிழில் மாபெரும் காவியங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை தனது ஓவியங்களில் வரைந்து மிகவும் பிரபலமாகியுள்ளார். அவர் சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களின் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவாளராகவும் கருதப்பட்டார். உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்களை படைத்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு மேல்நாட்டு ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவிவர்மா.
இவர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள கிளிமானுர் அரண்மனையில் ஏப்ரல் 29, 1848 ஆம் வருடம் பிறந்தார். இவரது தந்தை நீலகண்டன் பட்டதிரிபட். இவர் சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் போன்ற மொழிகளை பயின்றது மட்டுமல்லாமல் ஓவியம் வரையிலும் மிக ஆர்வம் காட்டியுள்ளார். 7 வயதில் அவர் கரித்துண்டுகளை பயன்படுத்தி அரண்மனை சுவர்களில் வரைய தொடங்கியுள்ளார். அவருக்குள் ஒளிந்திருந்த ஓவிய திறமையை கவனித்த அவரது மாமா ராஜா ராஜவர்மாவை அழைத்து அவருக்கு ஓவியம் வரைவதற்காக ஆரம்ப பாடங்களையும் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளார்.
மகாராஜா ராஜவர்மரை மிக சிறப்பாக வரைந்ததற்காக “வீரஸ்ருங்கலா” எனும் உயரிய விருதை ரவிவர்மாவிற்கு அளித்து கௌரவத்துள்ளார். 1873 ஆம் வருடம் ரவிவர்மா சென்னை ஓவிய கண்காட்சியில் முதல் பரிசை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து 1873 ஆம் வருடம் வியன்னாவில் நடைபெற்ற ஒரு ஓவிய கண்காட்சியில் அவரது ஓவியங்கள் இடம் பெற்று சிறந்த ஓவியத்திற்கான விருதை பெற்றது இதன் மூலமாக அவரது ஓவியங்கள் உலகில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
தென்னிந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள் என அவர்களை பயன்பாட்டில் கொண்டு இந்து மத தெய்வங்களை வடிவமைத்துள்ளார். ரவிவர்மன் அவர்கள் தனது ஓவியங்களில் மகாபாரத கதை துஷ்யந்தன்- சகுந்தலா, நளன்- தமயந்தி போன்ற தொடர்களை சித்தரித்த தவிர குறிப்பிடத்தக்கதாகும். ஐரோப்பிய ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட அவர் நவீன ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தினார். அவரது ஓவியங்களில் இந்திய மரபுகளோடு ஐரோப்பிய கலைநுட்பத்தையும் பார்க்க முடியும். இதுவே அவரது ஓவியங்கள் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைந்தது.
ரவிவர்மாவின் கலைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கேரளா அரசு ராஜா ரவிவர்ம புராஸ்காரம் என்னும் ஒரு விருதை கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பாராட்டும் ஒவ்வொரு வருடமும் வழங்கி கௌரவித்து வருகின்றது. அவரது நினைவாக கிளிமானூரில் உள்ள ராஜா ரவிவர்மா உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. மேலும் அவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் இருக்கிறது.