கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு இழுத்ததாகவும், இதனால் அந்த மாணவி நண்பர்கள் அதை தட்டி கேட்டபோது மோதல் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.