Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் இப்ராஹிம் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஷிமாபிவி(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரஷிமா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஷிமா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷிமா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |