வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மேடவாக்கம் சிவகாமி நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.