75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் விதமாக நூதனமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்துரை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்பவர் தன்னுடைய கண் விழிகளில் தேசிய கொடியை வரைந்து வைத்துள்ளார்.
மேலும் இவர் இதற்காக முட்டை ஓட்டின் உள் பகுதியில் இருக்கும் வெள்ளை கருவின் மேல் உள்ள மெல்லிய ஆடை போன்ற படலத்தை எடுத்து அதில் தேசிய கொடி வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.