Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்”… ரஜினி தகவல்….!!!!!

விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ரஜினி கூறியதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகின்றது. இந்த நிலையில் ரஜினி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

அப்பொழுது ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்கள் ஜெயிலர் திரைப்படம் பற்றி கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி அடுத்தது ஷூட்டிங் தான் என சிரித்தபடி கூறினார். இதனால் கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Categories

Tech |