Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்று வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகையா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ஆவுடையார் தாய் என்ற மனைவியும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முருகையா மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகையா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

அதன்பின் முருகையா வீட்டில் கதவை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகையாவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |