வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகர் 3-வது தெருவில் கணேஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய மகன் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் கோபத்தில் பவித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.