சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியில் கருணாகரன்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொர்ண லட்சுமி (12) என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளியில் இருந்து டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் கழிவறைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சிறுமி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த நந்தினி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.