வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியில் கொத்தனாரான பிரவீன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.