Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் 2022….. மாலை, மரியாதையுடன் பஞ்சாபில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…..!!!!!

இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பல வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதிலும் இந்தியாவை வீரர்கள் இன்று ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது.

அதிலும் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஆஆண்கள் பளுதூக்குதல் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங், போட்டிகளில் கலந்துகொண்டு நாடு திரும்பியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார். அதேபோல பளு தூக்குதல் போட்டியில் மற்றொரு வீரரான குருதிப் சிங் வெண்கலப்பதக்கம்  வென்றுள்ளார். அவருக்கும் பஞ்சாப் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Categories

Tech |