Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து….. வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றம்….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவில் மிகப்பெரிய அணையாக பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து வினாடிக்கு 2,551 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது. இடுக்கி அணைக்கு வெளியேறும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது.

காலையில் 2,228 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,551 கனஅடியாக அதிகரித்துள்ளதால் எல்லையோர பகுதியில் வசிக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |