Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளியிலேயே விஷம் குடித்த மாணவன், மாணவி… பரபரப்பு…!!!!

கடலூரில், அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன், மாணவி இருவர் அடுத்தடுத்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவியை காதலித்துள்ளார். இதில், மாணவி தனக்கு தோல் வியாதி இருப்பதால், தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், மாணவனோ உனக்கு முன்பு நான் போகிறேன் என்று தண்ணீரில் விஷம் கலந்து குடிக்க, மாணவியும் குடித்துள்ளார்.

இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தற்கொலைகளை தடுப்பதற்காக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |