காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(16) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி நடுவலூர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
ஆனாலும் சிறுமி கிடைக்கவில்லை. இது தொடர்பாக பன்னீர்செல்வம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்