அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அணிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் உண்மையான அதிமுக என கூறி வருகின்றது. ஓபிஎஸ் அணியை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்து நீக்கினார். அத்துடன் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அறிவித்துள்ளார். அந்த வகையில் கோவை செல்வராஜ் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை செல்வராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவை உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது. அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்து இருக்கிறது.
தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் போன்றவர்கள் தலைமையிலே அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவையில் விரைவில் கட்சியின் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் தற்போதுள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தமில்லை. மேலும் தொண்டர்களின் ஆதரவு ஒபிஎஸ் தரப்பிற்கு உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு பழனிசாமி பேசி வருகின்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டாத கருத்துக்களை கூறி வருகின்றார். இப்படி அவர் பேசி வந்தால் அவரது முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என தெரிவித்துள்ளார்.