Categories
தேசிய செய்திகள்

“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னை தாக்குங்கள்”….. ராகுல் காந்தி அதிரடி பேட்டி….!!!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா உங்கள் கண்முன்னே அழிந்து கொண்டே இருக்கிறது.

அதனை தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்படக்கூடாது என்பதை அவர்களது திட்டம். இந்தியாவில் இருக்கும் 2, 3 பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதனை தொடர்ந்து செய்யப் போகிறேன். நான் எவ்வளவு அதிகமாக எதிர்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன். நான் கடுமையாக தாக்கப்படுவேன். எனவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை தாக்குங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |