Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு…. ரிசர்வ் வங்கி திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக உயர்த்தியது.

இதனை தொடர்ந்து ஜுன் 8-ஆம் தேதி மீண்டும் கூடிய இந்தக்குழு, ரெப்போ வட்டியை மேலும் 0.50 சதவிகிதம் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்து வந்தது. இதனிடையே தற்போது, ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று மேலும் அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.5 சதவிகிதம்  உயர்த்தப்பட்ள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.40 ஆக அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி செலுத்த நேரிடும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |