Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டியவர்களுக்கு நோட்டீஸ்…. பின் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு, கடைகள், சுற்றுச்சுவர் கட்டியிருந்தனர். இதன் காரணமாக அவ்வழியாக போகும் மழைநீர், கழிவுநீர் வடியாமல் இருந்தது. அத்துடன் சுகாதாரமைய அலுவலகத்திற்குள் கழிவுநீர் சென்று வருகிறது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் அதனை அகற்றாமல் வைத்திருந்தனர்.

அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் சுந்தரிராஜா, ஆணையாளர் நவேந்திரன் போன்றோர் உத்தரவு பிறப்பித்தனர். அந்த வகையில் நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்செல்வம் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 ஆக்கிரமிப்பு வீடுகள், 2 கடைகள், சுற்றுச்சுவர்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக இடித்துஅகற்றினர். அதனை தொடர்ந்து இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் செய்தால் அதிரடியாக அகற்றப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

Categories

Tech |