Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. மாமல்லபுரத்தில் 11 நாட்களுக்கு இலவச அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பாரம்பரிய இடங்களில் நுழைவுக் கட்டணம் இன்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிப்பதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இங்கு 11 நாட்கள் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் இல்லாமல் சிற்பங்களை கண்டு ரசிக்கலாம்.

அது மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் 18ஆம் தேதி, உலக பாரம்பரிய வார துவக்க நாளான நவம்பர் 19ஆம் தேதி, உலகப் பெண்கள் தினமான மார்ச் 8 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் பெண்களுக்கு மட்டுமே இலவச அனுமதி உண்டு. தற்போது முதல் முறையாக 11 நாட்கள் தொடர்ச்சியாக இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |