கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.