சென்னையில் செய்தி துறை அமைச்சர் மூவிஸ் சுவாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய செய்து துறை அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலாக பிரிக்கப்பட்டு சென்னை மட்டும் திருச்சிராப்பள்ளி இரண்டு மண்டலங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசுக்கும் மக்களுக்கு பாலமாக செய்தி துறை அமைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை பிற மாநிலங்களுக்கு பின்பற்றக்கூடிய வகையில் திறம்பட செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை எளிதில் மக்கள் அறிந்து பயன்படக்கூடிய வகையில் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்த துறை சிறப்பாக செய்து வருகிறது.
அதன்படி மாவட்டம் மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நாளிதழ், தொலைக்காட்சிகள் மற்றும் தற்போது இளைஞர்களை பெரிதும் கவரும் சமூக ஊடகங்களில் செய்திகள் இடம் பெற ஆவணம் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களின் அன்றாட பிரச்சினைகளை மற்றும் தேவைகளை உடனுக்குடன் அறிந்த, மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அலுவலர்களின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கள் பணிகளை முழு ஈடுபாடுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இதனையடுத்து 75வது சுதந்திர தின விழாவை சிறப்பாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இது குறித்து தொடர்ந்து தலைமை இடத்தில் இருந்து வர பெரும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் படங்கள் இடம்பெற்றுள்ளது . இதனைத் தொடர்ந்து மாவட்டங்களின் தியாகிகளின் படங்கள் விடுபட்டு இருப்பின் மாவட்ட ஆட்சி தலைவருடன் கலந்தாலோசித்து உடனடியாக அவை இடம்பெறும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவகங்கள், மணிமண்டபங்கள் மற்றும் அரங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாலை 7 மணி வரை பார்வையாளர்கள் நேரத்தை நீடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதோடு இதனை இணை இயக்குனர்கள் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் நினைவுகளுக்கான வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்டங்களில் உள்ள நினைவுகளை சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் பராமரிக்கவும், தியாகிகளின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து, மின்விளக்குகளுடன் பிரகாசமாக ஒளிரும் வகையில் அமைக்கும் போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே தியாகங்கள் குறித்து விழிப்புணர்வு கூடுதலாக ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.