தைவான் நாட்டில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று முன்தினம் சீனாவின் கடும் எதிர்ப்பையும் ஏறி தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவான் நாட்டின் விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 400 விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ள இடங்களை சுற்றி வான்வெளியில் விமானங்கள் பறக்ககூடாது எனவும், கடற்கரைகளில் கப்பல் செல்லக்கூடாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக போர் பதற்றம் அதிகமாக இருக்கும் 6 இடங்களில் தைவானை பாதுகாப்பாக இருக்கும் படி விமான நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகிறது. மேலும் தைவான் அரசு தங்கள் நாட்டின் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தி வருவதாகவும், அமெரிக்கா போன்ற சில நாடுகளுடன் ஒருங்கிணைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.