Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்…. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறிய மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் “சூப்பர் ஹிட் காப்” என்ற புதிய திட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கீழ்ப்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் போலீசார் கமிஷனர் கபில்குமார் சரத்கர், தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் ஹரிஷ் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த திட்டம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவா செய்தியாளர்களிடம் கூறியது, இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு கார்டு வழங்கப்படும். குழந்தைகள் வெளியே செல்லும்போது சாலையில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கிறார்களா? சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா? உள்ளிட்ட 12 அம்ச சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணித்து கார்டில் குறித்துக் கொள்வார்கள். 15 நாட்களுக்கு பிறகு அவர்களிடம் இந்த கார்டை வாங்கி அவர்களது கருத்துக்கள் ஆராயப்படும். இதன் மூலம் தமிழ்நாடு போக்குவரத்துக்கு பாதுகாவலர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து ‘பீக் அவர்’ நேரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழிப்பாதைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள செயலி மூலம் சென்னையில் எந்த இடத்தில் மூன்று நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்பதை கூகுள் மேப்பில் தகவல் வாங்கி ஆராயப்படும். மேலும் பருவ மழை எதிர்கொள்ள அனைத்து வசதிகளை உள்ளடக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாடு அறையை அமைக்க இருக்கிறோம். எனவே இந்த ஆண்டு பருவமழையை எளிதில் எதிர்கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |