கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.
இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். மாநில அளவில் அரசு பள்ளி வருவது இதுவே முதல் எனவே ஊர்மக்கள் ஒன்று திரண்டு ரயில் நிலையத்திற்கு சென்று மாணவிகளை வரவேற்றனர்.
அதனையடுத்து பள்ளி மைதானத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு அதனை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.