Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டையில் மாயமான 2 பிளஸ்-2 மாணவிகள்”…. சென்னையில் மீட்பு…!!!!!

உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன இரண்டு மாணவிகளை போலீசார் கோயம்பேட்டில் மீட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் களமருதூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்தார்கள்.

அப்பொழுது பள்ளியில் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்கள். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 மாணவிகளையும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |