தமிழக முதல்வருக்கு நாகலாந்து முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு தமிழக மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஒரு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் நாகலாந்து மாநிலத்தில் இருந்தும் அனேகமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதன் காரணமாக தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாகலாந்து மாநிலத்தில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இலவச அரசினர் மாளிகை கட்டுவதற்காக 10,000 சதுர அடி நிலத்தை கொடுத்துள்ளார். இதன் காரணமாக நாகலாந்து முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.