ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வீடுதோறும் தேசியக்கொடி திட்டத்தில் பங்கேற்க இ-போஸ்ட் ஆஃபீஸ் மூலம் தேசியக்கொடியை வாங்கிக்கொள்ளலாம் என தபால்துறை தெரிவித்துள்ளது. இதற்கு www.indiapost.gov.in அல்லது www.epostoffice.gov.in ஆகிய இணையதளங்களில் லாகின் செய்து தேசியக்கொடிகளை ஆர்டர் செய்யலாம். ஒரு கொடிக்கு ≈25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.